Saturday, July 23, 2016 | By: kuraliniyan s

திருக்குறள் கூறும் வாழ்க்கை நெறி



திருக்குறள் கூறும் வாழ்க்கை நெறி
 பள்ளிக்கூடங்களில் , நமது பேருந்துகளில் திருக்குறளை படித்தாலும் நம்மில் எத்தனை பேர் முழுமையாக அதன் பொருள் உணர்ந்து நம் வாழ்வில் கடைபிடிக்கிறோம் என்பது கேள்விக்குறியானது.இதுவரை அதன் பொருள் உணர்ந்து நாம் படிக்காவிட்டாலும் இனிமேல் திருக்குறளின் உண்மை பொருள் அறிந்து அதை நம் வாழ்க்கை நெறியாக கொள்வதே சிறந்தது.திருவள்ளுவர் புகழை சிலை வைத்து ,கோட்டம் அமைத்து பரப்பலாம். அதைவிட முக்கியமானது திருக்குறளை நம் வாழ்க்கை நெறியாக குழந்தை பருவம் முதல் இறப்பு வரை பின்பற்றுவதே நாம் திருவள்ளுவருக்கு ஆற்றும் மிகப்பெரிய பெருமையாகும்

திருவள்ளுவர் வாழ்க்கை நெறியை
  1. அறம் ,
  2. பொருள்
  3. இன்பம்
 என மூன்று பகுதிகளாக பிரித்துள்ளார் .

திருக்குறளின் தத்துவமே " நல்வழியில்  வாழ்ந்து,நல்வழியில் பொருள்சேர்த்து இன்பமான வாழ்வு வாழ்வதே ஆகும்".

பாயிரவியல்   ( முன்னுரை  )
--------------------------------------
  • கடவுள் வாழ்த்து – கடவுளை வணங்குதல், நம் தாய் ,தந்தையரை வணங்குதல்
  • வான் சிறப்பு – மழையின் பெருமை (இயற்கையின் சிறப்பு )
  • நீத்தார் பெருமை – நமக்கு நல்வழியை காட்டிய நம் முன்னோர்களின்  சிறப்பு,
  • அறன் வலியுறுத்தல் – அறத்தின் சிறப்பை வலியுறுத்திக் கூறுதல்


இல்லறவியல்    


  • இல்வாழ்க்கை – மனைவியோடு கூடிவாழ்தல்
  • வாழ்க்கைத் துணைநலம் – மனைவியின் சிறப்பு
  • மக்கட்பேறு – அறிவுள்ள பிள்ளைகளைப் பெறுதலின் சிறப்பு
  • அன்புடைமை – அன்பு செலுத்துதல்
  • விருந்தோம்பல் – விருந்தினரை உபசரிக்கும் முறைமை
  • இனியவைகூறல் – இனிமையான சொற்களையே சொல்லுக
  • செய்ந்நன்றி அறிதல் – பிறர் செய்த நன்மையை என்றும் மறவானை
  • நடுவு நிலைமை
  • அடக்கமுடைமை – உணர்வு தீயவழியில் செல்லாமல் அடக்குதல்
  • ஒழுக்கமுடைமை – நல்ல நெறிகளை கடைப்பிடித்தல்
  • பிறனில் விழையாமை – பிறனுடைய மனைவியை விரும்பாமை
  • பொறையுடைமை – பொறுமை காத்தல்
  • அழுக்காறாமை – பொறாமை கொள்ளாமை
  • வெஃகாமை – பிறர் பொருளை அபகரிக்க எண்ணாமை
  • புறங்கூறாமை – பிறர் பற்றி கோள் சொல்லாமை
  • பயனில சொல்லாமை – பயன் இல்லாத சொற்களைச் சொல்லாமை
  • தீவினையச்சம் – பிறருக்கு தீமை செய்ய அஞ்சுதல்
  • ஒப்புரவறிதல் – பொதுவான அறங்களை அறிந்து செய்தல்
  • ஈகை – ஏழைக்கு இரங்குதல்
  • புகழ் – நிலையான புகழ்


துறவறவியல்    

  • அருளுடைமை – எல்லா உயிர்களிடத்தும் செலுத்தும் இரக்கம்
  • புலால் மறுத்தல்
  • தவம் – மனத்தை அடக்கித் தவம்
  • கூடா ஒழுக்கம்
  • கள்ளாமை – பிறர் பொருள் விரும்பாமை
  • வாய்மை – உண்மை பேசுதல்
  • வெகுளாமை – கோபம் கொள்ளாமை
  • இன்னா செய்யாமை – எவ்வுயிர்க்கும் துன்பம் செய்யாதிருத்தல்
  • கொல்லாமை
  • நிலையாமை – நிலைக்காமை
  • துறவு – பொருள்களின் மீதுள்ள பற்றினை விடுதல்
  • மெய்யுணர்தல் – உண்மையை உணர்தல்
  • அவா அறுத்தல் – ஆசையினை ஒழித்தல்

ஊழியல்

  • ஊழ் – விதியின் வலிமை



திருக்குறள் கூறும் வாழ்வியல் நெறியை அறம் பகுதியில் திருவள்ளுவர்  என்ன சொல்ல போகிறார் என்பதை நம்மால் புரிந்து கொள்ள இயலும் என நம்புகிறேன்  ..








Saturday, March 26, 2011 | By: kuraliniyan s

சிந்திப்போம் .......செயல்படுவோம் ....வாக்களிப்போம் ........

சிந்திப்போம் ....செயல்படுவோம் ....வாக்களிப்போம் .................

இந்த நேரத்தில் இந்த கட்டுரை மிகவும் முக்கியமான ஒன்று நான் நினைக்கிறேன் . "என்ன வளமில்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்" என்ற பாரதியின் வரிகளை நினைத்து கொண்டு சிந்திப்போம் . நமக்கு இலவசம் முக்கியமா ! நமது வளமையும் முன்னேற்றமும் ,மற்றும் எதிர்காலமும் முக்கியமா ! இலவசங்கள் நம்மை மயக்கும் ஆயதங்கள் ....நமது தமிழ் நாட்டுக்கு முக்கியமாக தேவை படுவது என்ன என்ன என்று விவாதிப்போம் ..
  1. தரமான சமச்சீர் கல்வி ...
  2. தடை அற்ற மின்சாரம்...
  3. காவிரி ,முல்லை பெரியார் தண்ணீர்...
  4. உழைப்புக்கு ஏற்ற ஊதியம்
  5. வேலை வாய்ப்பை பெருக்க தொழிற்சாலைகள்
  6. பல போக விவசாயம் செய்ய நவீன விவசாய முறை
  7. உற்பத்தியை பெருக்க அதி நவீன முறைகள்
  8. சாலை மற்றும் போக்கு வரத்து வசதிகளை மேம்படுத்துவது
  9. ஊழலை அடியோடு ஒழிப்பது
  10. நோய் நொடி அற்ற வாழ்க்கைக்கு சிறந்த மருத்துவ சேவை
இவைகள் இருந்தால் போதும் தேர்தல் அறிக்கைகளில் ...ஆனால் என்ன இருகின்றன ? இலவசங்கள் .இலவசங்களிள் யார் பயனடைய போகிறார்கள் ?எவ்வளவு காலங்கள் இந்த இலவசங்கள் நீடிக்கும் ?அதன் மதிப்பு என்ன?இப்பொழுதே பேரம் நடந்து கொண்டிருக்கும் மிக்சி ,கிரைண்டர் கம்பனிகளுடன் ..எனக்கு எவ்வளவு ? உனக்கு எவ்வளவு கமிசன் என்று ....மக்களாகிய நாம் சிந்திக்க வேண்டும் ..இல்லை எனில் நம் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததிகள் அழிவின் பாதைக்கு தான் செல்ல நேரிடும் ...
நாம் எதற்காக உழைக்கிறோம் மற்றும் சாம்பாதிக்கிறோம் ?..நம் உணவுக்காகவும் ..நம்முடைய கல்வி மற்றும் இதர தேவைகளுக்காகவும் தான் !என்பதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும் ...
நாளை தண்ணி பிரச்சினையால் நம் விவசாயம் நிலை குலைந்தால் ...
அரிசி மற்றும் உணவுபொருட்களின் விலை பன்மடங்கு உயரும்....
நமக்கான தேவையை நாம் பூர்த்தி செய்யும் நிலையை நாம் ஏற்படுத்த வேண்டும் ..நமது உணவு உற்பத்தி அதிகரித்தால் தானாகவே உணவு பொருட்களின் விலை குறையும் ..நம் நாட்டின் பொருளாதாராமும் அதிகரிக்கும் .நாமும் செழித்து வளரலாம் ...
நாளை மின்சார பற்றா குறையால் தொழிற்சாலைகள் இழுத்து மூடப்பட்டால் ? உற்பத்தி குறையும் ..விலைவாசி உயரும் ..வேலை
பறிபோகும் . நான் சொன்ன அனைத்தும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே ..சிந்திப்போம் .செயல்பாடுவோம் ..வாக்களிப்போம் ..இலவசங்களை புறந்தள்ளி வளமான தமிழகம் மிளிர பாடுபடுவோம் ...

நன்றி
இனியன்












Thursday, February 10, 2011 | By: kuraliniyan s

தமிழக தமிழர்கள் இனி என்ன செய்ய போகிறோம் ...

தமிழக தமிழர்கள் இனி என்ன செய்ய போகிறோம்

இலங்கையில் நம் தமிழ் உறவுகளை பறி கொடுத்தோம்
நம் தமிழ் மண்ணில் மீனவ உறவுகளை பறி கொடுத்து கொண்டிருக்கிறோம்
ஈழ மண்ணில் முள்வேலி வதை முகாமகளில் வதை பட்டு கொண்டிருக்கும்
மீதமுள்ள நம் உறவுகளை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறோம் ....
கொஞ்சம் கொஞ்சம் உள்ள தமிழ் அமைப்புகளும் ஆங்காங்கே பிரிந்து ஆளுக்கொரு வசனம் பேசி கொண்டிருக்கிறோம்....
நமக்கான தேவை என்னவென்று நாம் உணராதவரை நம்முடைய நோக்கங்களும் ,தேவைகளும் நிறை வராது






Sunday, January 9, 2011 | By: kuraliniyan s

இனி என்ன செய்ய போகிறோம் இதற்காக ... புத்தக வெளயீட்டு விழா சென்னை

இனி என்ன செய்ய போகிறோம் இதற்காக ... புத்தக வெளயீட்டு விழா சென்னை

புத்தகத்தின் தலைப்பே நம்மை வினா எழுப்புகிறது ...இதுவரை என்ன செய்தோம் என்பதை பேசுவதை விட இனி என்ன செய்ய போகிறோம் என்பது பற்றி சொல்வது சாலசிறந்தது .இலங்கை அரசின் போற்குற்றத்தை தெளிவாக விவரிக்கும் ஒரு சிறந்த நூல். இந்த விழாவில் அனைத்து தமிழ் உணர்வாளர்களையும் ஒன்றினைத்து விதமாக அனைத்து முக்கிய தமிழ் அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்று உரை ஆற்றினர் .ஐயா பழ நெடுமாறன் ,தமிழருவி மணியன் ,ம.தி.மு.க துணை பொது செயலாளர் மலை சத்யா ,பாட்டாளி மக்கள் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர் தி வேல் முருகன் ,நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் ,தமி தேசிய தொழார் தியாகு ஆகிய முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.
Thursday, May 27, 2010 | By: kuraliniyan s

தமிழக பேருந்துகள் இடை நில்லும் உணவகங்களில் நடக்கும் பகல் கொள்ளை

தமிழக பேருந்துகள் இடை நில்லும் உணவகங்களில் நடக்கும் பகல் கொள்ளை

நான் சென்னையிலிருந்து எனது சொந்த ஊருக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து எனது பெற்றோர்களுடன் புறப்பட்டேன். பேருந்து விக்கிரவாண்டி அருகே உள்ள உணவகத்தில் நின்றது. கடும் வெயில் என்பதால் கடும் தன்னிற் தாகம் அனைவருக்கும் ஏற்பட்டது. சரி அனைவருக்கும் மாம்பழ பழரசம் (செயற்கை ) வாங்கலாம் என்று நினைத்து விலையை கேட்டேன் .
மாம்பழ பழரசம் (செயற்கை) - 25
விற்கும் விலை 32
காபி ( பால் இல்லாதது ) 10
குடிநீர் பாட்டில் 18
இப்படி அநியாய விலை விற்கும் உணவகங்கள்
மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் ?








Thursday, January 21, 2010 | By: kuraliniyan s

ஈழம் காக்க ஈகம் செய்த மாவீரன் முத்துகுமார் நினைவாக வீரவணக்க சூளுரை ,சுடரோட்டம் ,திறந்த வெளி உரை அரங்கம்

ஈழம் காக்க ஈகம் செய்த மாவீரன் முத்துகுமார் நினைவாக வீரவணக்க சூளுரை ,சுடரோட்டம் ,திறந்த வெளி உரை அரங்கம் -சிதம்பரம் மேலவீதி பெரியார் சதுக்கம்

தமிழ் தேச பொது உடைமை கட்சி
Thursday, November 26, 2009 | By: kuraliniyan s

மாவீரர் திருநாள்

மாவீரர் திருநாள்
நம் தமிழினத்தின் விடிவுக்கு போராடிய வீரர்களின் வீர திருநாள்.............
நீங்கள் சிந்திய ரத்தம் என்றைக்கும் வீனாகாது .....................
நம் உறவுகளுக்கான விடிவை யாராலும் தடுக்க முடியாது .....