Tuesday, November 11, 2008 | By: kuraliniyan s

புரட்சி கவிஞனின் புரட்சி கவிதை

புரட்சி கவிஞனின் புரட்சி கவிதை

தென்திசையைப் பார்க்கின்றேன்; என்சொல்வேன் என்றன்சிந்தையெலாம் தோள்களெலாம் பூரிக்குதடா!அன்றந்த லங்கையினை ஆண்ட மறத்தமிழன்ஐயிரண்டு திசைமுகத்தும் தன்புகழை வைத்தோன்!குன்றெடுக்கும் பெருந்தோளான் கொடைகொடுக்கும் கையான்!குள்ளநரிச் செயல்செய்யும் கூட்டத்தின் கூற்றம்!என்தமிழர் மூதாதை! என்தமிழர் பெருமான்இராவணன்காண்! அவன்நாமம் இவ்வுலகம் அறியும்!

வஞ்சக விபூஷணனின் அண்ணனென்று தன்னைவையத்தார் சொல்லுமொரு மாபழிக்கே அஞ்சும்நெஞ்சகனை, நல்யாழின் நரம்புதனைத் தடவிநிறையஇசைச் செவியமுது தரும்புலவன் தன்னை,வெஞ்சமரில் சாதல்வர நேர்ந்திடினும் சூழ்ச்சிவிரும்பாத பெருந்தகையைத் தமிழ்மறைகள் நான்கும்சஞ்சரிக்கும் நாவானை வாழ்த்துகின்ற தமிழர்தமிழரென்பேன், மறந்தவரைச் சழக்கரெனச் சொல்வேன்!

வீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும்!விசைஒடிந்த தேகத்தில் வன்மை வேண்டும்!சூழ்ச்சிதனை வஞ்சகத்தைப் பொறாமை தன்னைத்தொகையாக எதிர்நிறுத்தித் தூள்தூ ளாக்கும்காழ்ச்சிந்தை, மறச்செயல்கள் மிகவும் வேண்டும்!கடல்போலச் செந்தமிழைப் பெருக்க வேண்டும்!கீழ்ச்செயல்கள் விடவேண்டும்! ராவ ணன்தன்கீர்த்திசொல்லி அவன்நாமம் வாழ்த்த வேண்டும்......

இன்று தென்திசையை பார்க்கும் போதெல்லாம் என் தாய் தமிழ் மக்கள் படும் துயரத்தை எண்ணி எங்கள் உள்ளமெல்லாம் துடிக்கிறது...........போதும்..... நிறுத்துங்கள் போரை ......சிந்திய ரத்தம் போதும்..........மாண்ட உயிர்கள் போதும்......தாருங்கள் எம் தமிழ் மக்களுக்கு தமிழ் ஈழம்....
இங்கனம்

குறள் இனியன்.சி